வெளியூரில் இருந்து வந்த உறவினர் ஒருவரை சொந்தபந்தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு கைக்கு வந்தது ( சரி சரி ஒத்துக்குறேன். சாயங்காலம் டீ போட்டு குடிக்க அலுப்புபட்டுதேன் :-) மாலை நேரம் புறப்பட்டோம்.
ரோட்ல போயிட்டிருக்கும் போதே வழிமறித்த ஒரு பெண்மணி என் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் என் உறவினரிடம் "உங்க மகள (கணவனை இழந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது) இப்ப கட்டி கொடுத்தாச்சா?? எத்தனநாள் தான் வச்சுட்டிருப்பீங்க?"
உடனே என் உறவினர் , "சீ...சீ....சீ.... அதெல்லாம் எங்க இதுல கிடையாது"
________
பருவம் அடைந்த உடன் தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார் உறவினர். இப்ப படிப்பு தானே முக்கியம். ஏன் இப்படிலாம்? என கேட்டதற்கு "ஐய்யே..... அதெல்லாம் நம்ம இதுல கிடையாது. பொண்ணுங்க வீட்டோட இருந்தா தான் பாதுகாக்க முடியும்"
________
15 வயதே ஆன பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டது. நல்லா படிக்கிற புள்ளையாச்சே ஏன் இப்படி கட்டி கொடுக்குறீங்க சீக்கிரமா? என கேட்டதுக்கு மணப்பெண்ணின் அப்பா "எங்க 'இதுல' அதெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்ததும் ஒடனே கட்டி கொடுத்துடணும்.
_______
இவையெல்லாம் ஒரு முஸ்லீமால்(?????????!!!!!!!!) தான் சொல்லப்பட்டது. இது அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வாததால் நீங்கள் அதிர்ச்சி ஆகவில்லை தானே? இப்படியே தான் தன் சமூகத்தை மேம்படுத்துவதாய் நினைத்து அதன் நல்ல சட்டதிட்டங்களை கொச்சைபடுத்துகின்றனர் சிலர். ஆனால் இதனை ஆழமாய் யாரும் ஆராய்வதில்லை. இதன் விளைவு என்ன தெரியுமா? :-)
ஹேமா- ஸ்கூட்டி வாங்க போறதா சொன்னியே? என்ன ஆச்சு?
ஆமி- இல்ல....... எங்க அம்மம்மா அதெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
ஹேமா- உங்க இதுல இப்படி தான் போ. (சளிப்புடன்)
ஆக்சுவலி ஏன் என் அம்மம்மா வேணாம்னு சொன்னாங்க என்ற காரணத்தையெல்லாம் அவ கேட்கல. பாட்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷமே சளிப்பை வெளிபடுத்தினாள். . தப்பு அவளிடத்தில் இல்லை. இஸ்லாம் மார்க்கத்தை தழுவியும், இஸ்லாமியராய் பிறந்தும் பலருக்கு முழுமையாய் இஸ்லாம்/குர் ஆன் சொல்லும் சட்டதிட்டங்கள், நபி வாழ்ந்த வாழ்க்கை முறை போன்ற அடிப்படை விஷயங்களும் தெரியாதவர்கள் அதிகம் (இருவருடங்களுக்கு முன் நானும் அப்படியே). அதை பற்றி என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.
சில விஷயங்கள் தெரிந்தாலும் அதை நடைமுறைபடுத்தினால் சமுதாயத்தில் தனித்து காட்டப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர். இதனாலேயே பலபேரு தூங்குற மாதிரி நடிக்கிற கொழந்தைங்க தான். (பத்து முட்டாள்கள் அடங்கிய ஒரு குழுவில் ஒரு முட்டாள் மட்டும் திடீர்ன்னு அறிவாளியாய்ட்டா மிச்சம் இருக்குறவிங்களாம் வித்தியாசமா பாப்பாய்ங்களே???? அதே மாதிரி தான். தானும் அறிவாளியாகுறதில்ல... அடுத்தவனையும் விடுறதில்ல........). இது தவறுன்னு தெரியும், ஆனாலும் தட்டி கேட்கமாட்டோம்ல???? பின்ன? பின்விளைவுகள் தான் ரொம்ப மோசமா இருக்கே........
சில உதாரணங்கள்
முன்பெல்லாம் எங்கள் ஊரில் மஹர் என்ற சொல்லையே அகராதில இருந்து எடுத்திருந்தாங்க. பாதி பேருக்கு அப்படின்னா என்னன்னு கூட தெரியாது. பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு லட்சம் கொடுத்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு பவுன்ல செயின் தரணும். இது தான் மஹர் என்ற அளவிலேயே எல்லோர்க்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டது/கருத்து திணிக்கப்பட்டது. எதிர்க்கும் சிலர் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கருத்தால் ஒடுக்கப்பட்டனர். தனிமைபடுத்தப்பட்டனர். எதுக்கு வம்பு... நாமளும் கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டு போய்ட வேண்டியது தான்னு பலர் கம்முன்னிருந்துடுவாங்க.
சமுதாயத்தில் முஸ்லீம் பெண்கள் ஆணாதிக்க குணம் கொண்ட முஸ்லீம் ஆண்களால் ஒடுக்கப்பட்டுள்ளவர்கள் என்ற எண்ணம் இன்று வரை அழியாத கரையாக இருப்பதற்கு இப்படி எக்குதப்பா இஸ்லாத்தையும் குர் ஆனையும் புரிந்துக்கொண்டிருப்பவர்களால் தான்.
எங்கே தன் பேச்சை கேட்க மறுத்துவிட்டுவிடுவாளோ.... தன் பேச்சுக்கள் எடுபடாதோ? தன்னை விட இவள் கருத்துக்கள் சிறந்ததாய் அனைவரும் ஏற்பார்களோ என்ற சைக்கோ மனநிலையில் "நீ என் பேச்சை தான் கேட்கணும். பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூற தகுதியற்றவர்கள். இது தான் நம்ம இஸ்லாத்தில் சொல்லி கொடுத்தது" என தன்னை காப்பாற்ற இஸ்லாத்தை ஆயுதமாக இழுக்கும் சைத்தான்கள் இருக்கவே செய்கிறார்கள். நம்ம பெண்கள் தான் கணவனே கண் கண்ட தெய்வம்னு பொழம்புறவங்களாச்சே... ஒடனே "நீங்க சொன்னா சரிதாங்க"ன்னு ஓடிப்போயி அடுப்பாங்கரைல்ல அப்பளம் சுட்டுட்டிருப்பாங்க. ஆதாரம் எடுத்து கொடுன்னு ஒரு வார்த்தை கேட்டா ஒருவரும் வாய் திறக்க முடியாது என்பதை இந்த பெண்களும் மறந்து விடுகின்றனர்.
நபிமார்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றிய பெரும்பாலான ஹதீஸ் ஆதாரங்கள், பெண்கள் மூலமாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பெண்கள் அன்று இஸ்லாமிய ஆண்களால் ஒடுக்கப்பட்டிருந்தால் எப்படி நமக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? ஆனால் சபையில் அனைவரும் இருக்க, தன் கருத்தை ஒரு பெண் கூற முனைந்தால் அவள் வாய்க்கு பெவிக்விக் தான்??!!!!. பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்.
தனக்கு விருப்பமில்லை எனில் அங்கு விருப்பு வெறுப்புக்களை மட்டுமே
விவாதிக்கப்பட வேண்டுமே தவிர உடனே, "இஸ்லாம் அப்படி தான் சொல்லுது"ன்னு நல்லொழுக்கங்களையும் நன்மைகான பாதையை மட்டுமே காட்டும் இஸ்லாம் மார்க்கத்தை இழுப்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் இல்லையா? இஸ்லாம் என்ற ஒத்த வார்த்தை சொன்னா உடனே விவாதங்கள் அங்கே எழாது, தன் விருப்பமும் எளிதாய் நிறைவேறி விடும் என்று நினைக்கும் சுயநலவாதிகளால் தான் இஸ்லாம் கூறாத இணைவைக்கும் செயல்களும், மூடபழக்கவழக்கங்களும் அரங்கேறி விடுகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வை பற்றி உண்மையை தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் (ஆதார நூல்- 2: 171)
தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க.
ரோட்ல போயிட்டிருக்கும் போதே வழிமறித்த ஒரு பெண்மணி என் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் என் உறவினரிடம் "உங்க மகள (கணவனை இழந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது) இப்ப கட்டி கொடுத்தாச்சா?? எத்தனநாள் தான் வச்சுட்டிருப்பீங்க?"
உடனே என் உறவினர் , "சீ...சீ....சீ.... அதெல்லாம் எங்க இதுல கிடையாது"
________
பருவம் அடைந்த உடன் தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார் உறவினர். இப்ப படிப்பு தானே முக்கியம். ஏன் இப்படிலாம்? என கேட்டதற்கு "ஐய்யே..... அதெல்லாம் நம்ம இதுல கிடையாது. பொண்ணுங்க வீட்டோட இருந்தா தான் பாதுகாக்க முடியும்"
________
15 வயதே ஆன பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டது. நல்லா படிக்கிற புள்ளையாச்சே ஏன் இப்படி கட்டி கொடுக்குறீங்க சீக்கிரமா? என கேட்டதுக்கு மணப்பெண்ணின் அப்பா "எங்க 'இதுல' அதெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்ததும் ஒடனே கட்டி கொடுத்துடணும்.
_______
இவையெல்லாம் ஒரு முஸ்லீமால்(?????????!!!!!!!!) தான் சொல்லப்பட்டது. இது அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வாததால் நீங்கள் அதிர்ச்சி ஆகவில்லை தானே? இப்படியே தான் தன் சமூகத்தை மேம்படுத்துவதாய் நினைத்து அதன் நல்ல சட்டதிட்டங்களை கொச்சைபடுத்துகின்றனர் சிலர். ஆனால் இதனை ஆழமாய் யாரும் ஆராய்வதில்லை. இதன் விளைவு என்ன தெரியுமா? :-)
ஹேமா- ஸ்கூட்டி வாங்க போறதா சொன்னியே? என்ன ஆச்சு?
ஆமி- இல்ல....... எங்க அம்மம்மா அதெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
ஹேமா- உங்க இதுல இப்படி தான் போ. (சளிப்புடன்)
ஆக்சுவலி ஏன் என் அம்மம்மா வேணாம்னு சொன்னாங்க என்ற காரணத்தையெல்லாம் அவ கேட்கல. பாட்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷமே சளிப்பை வெளிபடுத்தினாள். . தப்பு அவளிடத்தில் இல்லை. இஸ்லாம் மார்க்கத்தை தழுவியும், இஸ்லாமியராய் பிறந்தும் பலருக்கு முழுமையாய் இஸ்லாம்/குர் ஆன் சொல்லும் சட்டதிட்டங்கள், நபி வாழ்ந்த வாழ்க்கை முறை போன்ற அடிப்படை விஷயங்களும் தெரியாதவர்கள் அதிகம் (இருவருடங்களுக்கு முன் நானும் அப்படியே). அதை பற்றி என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.
சில விஷயங்கள் தெரிந்தாலும் அதை நடைமுறைபடுத்தினால் சமுதாயத்தில் தனித்து காட்டப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர். இதனாலேயே பலபேரு தூங்குற மாதிரி நடிக்கிற கொழந்தைங்க தான். (பத்து முட்டாள்கள் அடங்கிய ஒரு குழுவில் ஒரு முட்டாள் மட்டும் திடீர்ன்னு அறிவாளியாய்ட்டா மிச்சம் இருக்குறவிங்களாம் வித்தியாசமா பாப்பாய்ங்களே???? அதே மாதிரி தான். தானும் அறிவாளியாகுறதில்ல... அடுத்தவனையும் விடுறதில்ல........). இது தவறுன்னு தெரியும், ஆனாலும் தட்டி கேட்கமாட்டோம்ல???? பின்ன? பின்விளைவுகள் தான் ரொம்ப மோசமா இருக்கே........
சில உதாரணங்கள்
முன்பெல்லாம் எங்கள் ஊரில் மஹர் என்ற சொல்லையே அகராதில இருந்து எடுத்திருந்தாங்க. பாதி பேருக்கு அப்படின்னா என்னன்னு கூட தெரியாது. பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு லட்சம் கொடுத்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு பவுன்ல செயின் தரணும். இது தான் மஹர் என்ற அளவிலேயே எல்லோர்க்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டது/கருத்து திணிக்கப்பட்டது. எதிர்க்கும் சிலர் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கருத்தால் ஒடுக்கப்பட்டனர். தனிமைபடுத்தப்பட்டனர். எதுக்கு வம்பு... நாமளும் கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டு போய்ட வேண்டியது தான்னு பலர் கம்முன்னிருந்துடுவாங்க.
சமுதாயத்தில் முஸ்லீம் பெண்கள் ஆணாதிக்க குணம் கொண்ட முஸ்லீம் ஆண்களால் ஒடுக்கப்பட்டுள்ளவர்கள் என்ற எண்ணம் இன்று வரை அழியாத கரையாக இருப்பதற்கு இப்படி எக்குதப்பா இஸ்லாத்தையும் குர் ஆனையும் புரிந்துக்கொண்டிருப்பவர்களால் தான்.
எங்கே தன் பேச்சை கேட்க மறுத்துவிட்டுவிடுவாளோ.... தன் பேச்சுக்கள் எடுபடாதோ? தன்னை விட இவள் கருத்துக்கள் சிறந்ததாய் அனைவரும் ஏற்பார்களோ என்ற சைக்கோ மனநிலையில் "நீ என் பேச்சை தான் கேட்கணும். பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூற தகுதியற்றவர்கள். இது தான் நம்ம இஸ்லாத்தில் சொல்லி கொடுத்தது" என தன்னை காப்பாற்ற இஸ்லாத்தை ஆயுதமாக இழுக்கும் சைத்தான்கள் இருக்கவே செய்கிறார்கள். நம்ம பெண்கள் தான் கணவனே கண் கண்ட தெய்வம்னு பொழம்புறவங்களாச்சே... ஒடனே "நீங்க சொன்னா சரிதாங்க"ன்னு ஓடிப்போயி அடுப்பாங்கரைல்ல அப்பளம் சுட்டுட்டிருப்பாங்க. ஆதாரம் எடுத்து கொடுன்னு ஒரு வார்த்தை கேட்டா ஒருவரும் வாய் திறக்க முடியாது என்பதை இந்த பெண்களும் மறந்து விடுகின்றனர்.
நபிமார்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றிய பெரும்பாலான ஹதீஸ் ஆதாரங்கள், பெண்கள் மூலமாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பெண்கள் அன்று இஸ்லாமிய ஆண்களால் ஒடுக்கப்பட்டிருந்தால் எப்படி நமக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? ஆனால் சபையில் அனைவரும் இருக்க, தன் கருத்தை ஒரு பெண் கூற முனைந்தால் அவள் வாய்க்கு பெவிக்விக் தான்??!!!!. பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்.
தனக்கு விருப்பமில்லை எனில் அங்கு விருப்பு வெறுப்புக்களை மட்டுமே
விவாதிக்கப்பட வேண்டுமே தவிர உடனே, "இஸ்லாம் அப்படி தான் சொல்லுது"ன்னு நல்லொழுக்கங்களையும் நன்மைகான பாதையை மட்டுமே காட்டும் இஸ்லாம் மார்க்கத்தை இழுப்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் இல்லையா? இஸ்லாம் என்ற ஒத்த வார்த்தை சொன்னா உடனே விவாதங்கள் அங்கே எழாது, தன் விருப்பமும் எளிதாய் நிறைவேறி விடும் என்று நினைக்கும் சுயநலவாதிகளால் தான் இஸ்லாம் கூறாத இணைவைக்கும் செயல்களும், மூடபழக்கவழக்கங்களும் அரங்கேறி விடுகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வை பற்றி உண்மையை தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் (ஆதார நூல்- 2: 171)
தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க.
இது மற்ற சகோதர/சகோதரிகளுக்கு
உங்கள் பார்வைக்கு முன் ஒரு முஸ்லீமானவன் தவறு செய்து அதை நியாயப்படுத்த முயன்றால் தட்டிகேளுங்கள். அவன் "இது தான் என் மார்க்கம் சொல்லி கொடுத்தது" என்றால் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் கேளுங்கள். குர் ஆனும், ஹதீஸ்களும் அந்த தவறை தான் முஸ்லீம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது எனில் அதன் பின்னர் "முஸ்லீம்கள் தவறானவர்கள் தான்" என்று திட்டி தீர்க்க உங்களுக்கு உரிமை உண்டு (கவனிக்கவும் குர் ஆன் பரிந்துரைத்தால்) இல்லைன்னா என்கிட்ட சொல்லுங்க. நாளைக்கே ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போட்டுடலாம் . சரிதானே??? :-) _______________________
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (ஆதார நூல்- குர்ஆன் 2-228)
நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்.(ஆதார நூல்- குர்ஆன் 9-71)
மறுமணத்துக்கு யாரும் தடை விதிக்க கூடாது (பார்க்க- குர்ஆன் 2:232)
பெண்களுக்கு விவாகரத்து உரிமை உள்ளது (பார்க்க- குர்ஆன்- 22:28)
***************************
இன்னும் அதிக முற்போக்கு விஷயங்கள் குர் ஆனில் கொட்டிக்கிடக்கின்றன. அடுத்தடுத்த பதிவுகளில் மார்க்கத்தில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...