ஆறு மாதங்களுக்கு முன்னால்..
 இப்ப தான் ஆமியோட கால் லக்னோல பதியுது. 2 நாள் ட்ராவலில் முழுவதும் நம்மூர் சீரியல்கள் ஞாபகம் தான். வீட்டுக்கு போனதும் முதல் வேலையா சன் டீவியை ஓபன் பண்ணனும்னு நெனச்சுட்டே போனா  “தமிழ் சேனல் நை”  அப்படின்னு சொல்லிட்டான் அந்த கேபிள் கடங்கார பயபுள்ள. என்ன செய்ய? சோகத்தோட சேனலை ஓபன் பண்ணி ஹிந்தி சீரியலாவது பாக்கலாம்னா நம்மூர் சீரியலே பெட்டர். ஒரு அழுகை சீனையே 4 எபிசோட்க்கு இழுத்தடிச்சுட்டாங்க. அந்த நேரத்துல பொலம்பிட்டிருக்கும் போது தான்  சில நல்ல புரோக்ராம்லாம் கண்ணுக்கு மாட்டுச்சு.